Tuesday 29 December, 2009

பேனாவைத் தூக்கறாண்டா எம்புள்ளை சிங்கம்..! - கானா பாடல்..!

(பல்லவி)

பேனாவைத் தூக்கறான்டா எம்புள்ளை சிங்கம்..!
எழுத்து கூட்டி படிக்கிறான்டா எம்புள்ள தங்கம்..!
ஒண்ணரை வயசுதான்டா எம்புள்ளை சிங்கம்..!
கண்ணாலே பேசுறான்டா எம்புள்ள தங்கம்..!

(சரணம் - 1)

தத்தி தத்தி நடக்குறான்டா... அவன் தாத்தா போல பேசுறான்டா..!
தாமரைப்பூ சிரிப்புதான்டா... என் தங்க மகன் இவன்தான்டா..!
நல்லவங்க எல்லோருக்கும் நன்மை பல செய்வாண்டா..!
நாளைய உலகத்துக்கு பெரும் தலைவனாக வருவாண்டா..!

(பேனாவைத்...)

(சரணம் - 2)

குறும்புகள் செய்யுறான்டா.. மனசை கொள்ளை அடிக்குறான்டா..!
ஆர்ப்பாட்டம் பண்ணுறான்டா.. ஆட்டம் பாட்டம் போடுறான்டா..!
எல்லாத்தையும் படிப்பான்டா... ஏழை துயர் துடைப்பான்டா..!
எல்லோர்க்கும் நல்லவன்டா...  ஏட்டில் இடம் பிடிப்பான்டா..!

(பேனாவைத்...)

PDF-ஆகப் பெற..!


2 comments:

கமலேஷ் said...

அழகான கவி பாடல்...நல்லா இருக்குங்க...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

மோகனன் said...

வாங்க கமலேஷ்...

மிக்க நன்றி.. இந்த தளத்தில் முதல் பின்னூட்டம் இட்ட பெருமை தங்களைச் சாருகிறது...

வருகைக்கும், வாசிப்பிற்கும், வாழ்த்துரைக்கும் நன்றிகள்...

தங்களுக்கும் என் சார்பாகவும்... என் மகன் சார்பாகவும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்...