Thursday 17 December, 2009

மார்கழி மாசம் வந்தா..! - கானா பாடல்

(பல்லவி)

மார்கழி மாசம் வந்தா போதும்
எங்க வீதியெல்லாம் மாக்கோலமாகும்
சாணியில பிள்ளையாரு முளைக்கும்
அதில பூசணிப்பூ பூத்தபடி சிரிக்கும்...!

(சரணம் - 1)

அஞ்சு மணிக்கு அலாரம் அடிக்கும்
எல்லோரோட தூக்கத்தையும் கலைக்கும்...! (அல்லது)
எல்லோரையும் தூக்கதிலிருந்து எழுப்பும்
சுப்ரபாதம் அதிகாலையில் ஒலிக்கும்
குளிரோட காதில் வந்து குதிக்கும்..!

தந்தானத்தோம்..திந்தானத்தோம்..தகிடுதத்தோம்...
சாமி பேரை சொல்லி பலர் திகிடுதத்தோம்...
போடு....தந்தானத்தோம்..திந்தானத்தோம்..தகிடுதத்தோம்...
சாமி பேரை சொல்லி பலர் திகிடுதத்தோம்...

PDF-ஆகப் பெற..!


No comments: