Monday 28 December, 2009

நீல வான ஓடையில ..! - நட்பைப் பற்றிய கானா பாடல்

(பல்லவி)

நீலவான ஓடையில நெறைய  நெறைய நட்சத்திரம்..!
நண்பர் கூட்டம் சேர்ந்துகிட்டா கும்மாளம்தான் கூட வரும்..!
சொந்த வழி பந்தமெல்லாம் நாலு காசு எதிர் பார்க்கும்..!
நட்பு வழி பந்தமெல்லாம் நட்பை மட்டும் எதிர் பார்க்கும்..!

(சரணம் - 1)

உலகில் பூக்கும் பூக்களெல்லாம் பூத்த பிறகு வாடி விடும்..!
அன்பு, நட்பு ரெண்டு மட்டும் பூத்ததுமே வாழ வைக்கும்..!
நட்பு இல்லா மனிதனுக்கு நல்லது கெட்டது தெரியாது..!
நட்பு கொண்ட மனிதனுக்கு நாலு விஷயமும் தெரிய வரும்..!

(என் மேல் அன்பு கொண்டுள்ள எனது அன்பு நண்பர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..!)


PDF-ஆகப் பெற..!


No comments: