Monday, 30 November 2009

தாவணியைப் பார்த்து இங்க பல வருஷமாச்சு..! - கானா பாடல்

(பல்லவி)

தாவணியைப் பார்த்து இங்க பல வருஷமாச்சு
சுடிதாரும் ஜீன்சும் இங்கே பேஷனாகிப் போச்சு
அச்சம் மடம் நாணமெல்லாம் அல்பாயுசுல போச்சு
அல்டாப்பும் பீட்டரும்தான் பிகரின் பேஷனாச்சு...

(சரணம் - 1)


குடத்தை எடுத்து நடக்கும் அழகு அப்பங்கோ
குண்டு பூசணி உடம்பிருக்குது இப்பங்கோ...
அன்ன நடை நடப்பதெல்லாம் அப்பங்கோ...
ரோடு அதிர நடக்குதுங்க இப்பங்கோ...
ஸ்டூல போட்டு நடக்குதுங்க இப்பங்கோ... (தாவணியைப்…)

(சரணம் - 2)

உதடு சிவக்க சிரிப்பதெல்லாம் அப்பங்கோ
உதட்டுல சிவப்பு சாயம் பூசுதுங்கோ இப்பங்கோ...
தலையில் மல்லியப்பூ வப்பதெல்லாம் அப்பங்கோ...
தலையில் கிராப்பு அடிச்சு சுத்துங்க இப்பங்கோ...
ரோட்டுல தலைவிரிச்சு சுத்துங்கோ இப்பங்கோ... (தாவணியைப்…)



PDF-ஆகப் பெற..!


காதல் ஒரு மாயவலை..! - கானா பாடல்..!

(பல்லவி)

காதல் ஒரு மாய வலை..!
கண்ணா நீயும் மயங்கிடாத..!
காதல் விரிக்கும் கன்னி வலை..!
கண்ணா நீயும் கவுந்துடாத..!
சிரிப்பு சிரிச்சி ஏமாத்துண்டா..!
உன்னை செல்லக்காசா ஆக்கிடும்டா..!
காதல் ஒரு மாய வலை..!
கண்ணா நீயும் மயங்கிடாத..!

(சரணம் - 1)


தெருவில் நடந்து போறவளை
உசிரக் கொடுத்து நேசிப்பதைவிட
கருவில் உன்னை சுமந்தவளை
காலம் முழுக்க நேசிக்கணுன்டா..!
உருக் கொடுத்த உத்தமத் தாயை
உசிரிருக்கும் வரை மறக்காம இருக்கணுன்டா..!              
அன்பு காட்ட உன் அம்மா இருக்காடா...
அவளைப் போல தெய்வம் வேற யாரடா..!

(காதல் ஒரு...)

(சரணம் - 2)

கண்ணைக் காட்டி போனவளை
காலம் முழுக்க நேசிப்பதை விட...
கண்ணைப் போல உன்னைக் காத்த
உங்கப்பனை நீயும் நேசிக்கணுன்டா..!
காதல் பித்து பிடிக்க வச்சி கண்ணாமூச்சி காட்டுவாடா..
அண்ணன் சொன்னார்...அப்பா சொன்னாருன்னு
கடைசியில் உன்னை அம்போன்னு விட்டுடுவாடா..!

(காதல் ஒரு...)

PDF-ஆகப் பெற..!


Monday, 2 November 2009

ஷேர் ஆட்டோ... ஷேர் ஆட்டோ..! - கானா பாடல்





(பல்லவி)

ஷேர் ஆட்டோ... ஷேர் ஆட்டோ..!
மஞ்சக் கலரு ஷேர் ஆட்டோ..!
வளைஞ்சி நெளிஞ்சி ஓடுது பார்
ஊரு முழுக்க ஷேர் ஆட்டோ..!
கொஞ்ச தூரம் போகணும்னா அஞ்சு ரூபா தரணும் நீங்க..!
ரொம்ப தூரம் போகணும்னா பத்து ரூபா தரணும் நீங்க..!

(சரணம் - 1)

மாநகர பஸ்ஸையெல்லாம் முந்திகிட்டு போகுமுங்க...
நெரிசல் கூட்டத்திலயும் நேக்காக போகுமுங்க...
நெருக்கி உக்காந்துட்டா டிரைவர் மனசு நிறையுமுங்க...
நெருக்கடி காலத்துல கைகொடுக்கும் தோழனுங்க..!

(ஷேர் ஆட்டோ...)

(சரணம் - 2)

ராவு பகல் பார்க்காம ராட்டினம் போல் சுத்துமுங்க...
கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கின்ற தோழனுங்க...
ஒற்றுமையை உணர்த்துகின்ற உண்மையான வாகனங்க...
ஒண்ணாக பயணம் செஞ்சா உங்க செலவு குறையுமுங்க..!

(ஷேர் ஆட்டோ...)

PDF-ஆகப் பெற..!


Tuesday, 13 October 2009

மயக்கும் மாலையிலே..! - கானா பாடல்

(பல்லவி)

மயக்கும் மாலையிலே… மார்கழி மாசத்திலே…
மங்கையவள் ஓரக்கண்ணால் சிரிக்கிறா…
மாமன் மயங்கிபுட்டா முந்தானையால் அடிக்கிறா…
மனசை கிள்ளி கிள்ளி என்னை அவ மயக்குறா..!

(சரணம் - 1)

காதல் ஒரு போதையடா… பார்த்தாலே ஏறுதடா…
பாக்காம பார்த்துப்புட்டா படபடப்பு கூடுதடா...
காதல் ராணி அவதாண்டா… கட்டழகியும் அவதாண்டா…
சிட்டாகப் பறந்துபுட்டா சோகம் என்னை வாட்டுதடா…(மயக்கும்…)

 ( சரணம் - 2)

ராப்பொழுது தூங்கலடா… ராசாத்தி நினைப்புலடா…
என்னிரவைப் பகலாக்கி துன்பத்தை எனக்கு காட்டுதடா...
கண்ணி வலை விரிச்சி வச்சு கண்ணோடு கலந்ததடா...
கண்ணுக்குள்ள இருந்துகிட்டு காதல் போதை காட்டுதடா..! (மயக்கும்…)

PDF-ஆகப் பெற..!


Friday, 9 October 2009

சமுதாயநிலை மாறத்தான் வேணுமே..! - கானா பாடல்

(பல்லவி)

சமுதாயநிலை மாறத்தான் வேணுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…
சமூக ஏற்றத்தாழ்வு ஒழிவதற்கும்…
புதிய சரித்திரத்தை படைப்பதற்கும்…
சமுதாயநிலை மாறத்தான் வேணுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…

(சரணம் - 1)

சாதி மதிம் ஒழிய வேணும்…
சமத்துவம்தான் மலர வேணும்…
சாதி வெறியர்களை அழிக்க வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…

புல்லர்களை ஒழிக்க வேணும்…
புரட்சி மணம் நடக்க வேணும்…
புதிய உலகம் படைக்க வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…    (சமுதாயநிலை…)

 ( சரணம் - 2)

ஏற்றம் பெற உழைக்க வேணும்…
மாற்றங்களை மதிக்க வேணும்…
ஏழ்மை நிலையை போக்க வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…

படிப்பறிவை வளர்க்க வேணும்…
பட்டறிவை பயன்படுத்த வேணும்…
உலகம் போற்ற வாழவேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…  (சமுதாயநிலை…)


(சரணம் – 3)

விவசாயிகளை உயர்த்த வேணும்…
விலைவாசியை குறைக்க வேணும்…
வீணர்களை விரட்ட வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே… 


உழைக்கும் வர்க்கம் உயர வேணும்
உழைப்புக்கேத்த ஊதியம் வேணும்
ஊழல்வாதிகளை துரத்த வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…  (சமுதாயநிலை…)

PDF-ஆகப் பெற..!


Wednesday, 7 October 2009

வாழ்க்கை ஒரு வட்டமடா..! - கானா பாடல்

(பல்லவி)

வாழ்க்கை ஒரு வட்டமடா...
வாழாவிட்டா கஷ்டமடா...
ஏழை வாழ்க்கை சிக்கலடா...
என்னால் சகிக்க முடியலடா..!

(சரணம் - 1)

ஏழை வாழ்க்கை மண்ணுல
பணக்கார வாழ்க்கை விண்ணுல
காசு, பணம் செய்யும் மாயம் கொஞ்சம் நஞ்சம் இல்ல..!
பாவம் நீயும் செய்யாத... பட்டினியை சகிக்காத...
பல்லாக்கு தூக்கி தூக்கி பச்சோந்தி போல் வாழாத...!  (வாழ்க்கை...)


(சரணம் - 1)

எல்லோரும் சமமுன்னாங்க...
எல்லாரும் இந்நாட்டு மன்னருன்னாங்க...
குடிசையில் வாழுகின்ற மன்னர்கள் இங்கே பாருங்க...
ஏய்ச்சி நீ வாழாத... ஏமாந்து போகாத...
உழைப்பை நீ உணர்ந்துகிட்டா... வாழ்க்கை உந்தன் கையில..! (வாழ்க்கை...)

PDF-ஆகப் பெற..!


Thursday, 24 September 2009

ஆயிரந்தான் இருந்தாலும் அம்மா போல யார் வருவா..! - கானா பாடல்

(பல்லவி)

ஆயிரந்தான் இருந்தாலும் அம்மா போல யார் வருவா..!
அவளைப் போல அன்பைத் தர உலகத்துல யார் இருக்கா..!
உருக்கொடுத்து, உயிர் கொடுத்த உத்தமியை மறக்காதப்பா..!
இந்த கலிகால உலகத்திலே  மனித தெய்வம் அவதாம்பா..!

(சரணம் - 1)

பத்துமாசம் சுமந்தவப்பா... பத்தியம்தான் இருந்தவப்பா..!
பத்தரை மாத்து தங்கமப்பா..! பாசத்திற்கு பணிந்தவப்பா..!
தூக்கத்தையே மறந்தவப்பா... தூய உள்ளம் படைச்சவப்பா..!
துக்கப்பட்டு நீயிருந்தா... உடனே துடிப்பவளும் அவதாம்பா..!

(
ஆயிரந்தான்...)

(சரணம் - 2)

தியாக மனம் கொண்டவப்பா... திடமனசை நமக்களிப்பா..!
ஓயாம உழைப்பவப்பா... நம்மை உற்சாகமா வைச்சிருப்பா..!
கஷ்டங்களை அனுபவிப்பா... கட்டாந்தரையில் படுத்திருப்பா..!
இஷ்டப்பட்டு நீ கேட்டா தன் இதயத்தையே அறுத்து வைப்பா..!

(
ஆயிரந்தான்...)

(என் அன்னைக்கும், உலகத்தில் உள்ள அனைத்து அன்னைகளுக்கும் உங்களனைவரின் சார்பாக இந்த கானாப் பாடலை, அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்..!)


PDF-ஆகப் பெற..!