Monday 30 November, 2009

காதல் ஒரு மாயவலை..! - கானா பாடல்..!

(பல்லவி)

காதல் ஒரு மாய வலை..!
கண்ணா நீயும் மயங்கிடாத..!
காதல் விரிக்கும் கன்னி வலை..!
கண்ணா நீயும் கவுந்துடாத..!
சிரிப்பு சிரிச்சி ஏமாத்துண்டா..!
உன்னை செல்லக்காசா ஆக்கிடும்டா..!
காதல் ஒரு மாய வலை..!
கண்ணா நீயும் மயங்கிடாத..!

(சரணம் - 1)


தெருவில் நடந்து போறவளை
உசிரக் கொடுத்து நேசிப்பதைவிட
கருவில் உன்னை சுமந்தவளை
காலம் முழுக்க நேசிக்கணுன்டா..!
உருக் கொடுத்த உத்தமத் தாயை
உசிரிருக்கும் வரை மறக்காம இருக்கணுன்டா..!              
அன்பு காட்ட உன் அம்மா இருக்காடா...
அவளைப் போல தெய்வம் வேற யாரடா..!

(காதல் ஒரு...)

(சரணம் - 2)

கண்ணைக் காட்டி போனவளை
காலம் முழுக்க நேசிப்பதை விட...
கண்ணைப் போல உன்னைக் காத்த
உங்கப்பனை நீயும் நேசிக்கணுன்டா..!
காதல் பித்து பிடிக்க வச்சி கண்ணாமூச்சி காட்டுவாடா..
அண்ணன் சொன்னார்...அப்பா சொன்னாருன்னு
கடைசியில் உன்னை அம்போன்னு விட்டுடுவாடா..!

(காதல் ஒரு...)

PDF-ஆகப் பெற..!


No comments: