Friday 9 October, 2009

சமுதாயநிலை மாறத்தான் வேணுமே..! - கானா பாடல்

(பல்லவி)

சமுதாயநிலை மாறத்தான் வேணுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…
சமூக ஏற்றத்தாழ்வு ஒழிவதற்கும்…
புதிய சரித்திரத்தை படைப்பதற்கும்…
சமுதாயநிலை மாறத்தான் வேணுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…

(சரணம் - 1)

சாதி மதிம் ஒழிய வேணும்…
சமத்துவம்தான் மலர வேணும்…
சாதி வெறியர்களை அழிக்க வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…

புல்லர்களை ஒழிக்க வேணும்…
புரட்சி மணம் நடக்க வேணும்…
புதிய உலகம் படைக்க வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…    (சமுதாயநிலை…)

 ( சரணம் - 2)

ஏற்றம் பெற உழைக்க வேணும்…
மாற்றங்களை மதிக்க வேணும்…
ஏழ்மை நிலையை போக்க வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…

படிப்பறிவை வளர்க்க வேணும்…
பட்டறிவை பயன்படுத்த வேணும்…
உலகம் போற்ற வாழவேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…  (சமுதாயநிலை…)


(சரணம் – 3)

விவசாயிகளை உயர்த்த வேணும்…
விலைவாசியை குறைக்க வேணும்…
வீணர்களை விரட்ட வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே… 


உழைக்கும் வர்க்கம் உயர வேணும்
உழைப்புக்கேத்த ஊதியம் வேணும்
ஊழல்வாதிகளை துரத்த வேணும் நாமுமே…
அதற்கு பாடுபட வேண்டியதும் நாமுமே…  (சமுதாயநிலை…)

PDF-ஆகப் பெற..!


No comments: