Tuesday 13 October, 2009

மயக்கும் மாலையிலே..! - கானா பாடல்

(பல்லவி)

மயக்கும் மாலையிலே… மார்கழி மாசத்திலே…
மங்கையவள் ஓரக்கண்ணால் சிரிக்கிறா…
மாமன் மயங்கிபுட்டா முந்தானையால் அடிக்கிறா…
மனசை கிள்ளி கிள்ளி என்னை அவ மயக்குறா..!

(சரணம் - 1)

காதல் ஒரு போதையடா… பார்த்தாலே ஏறுதடா…
பாக்காம பார்த்துப்புட்டா படபடப்பு கூடுதடா...
காதல் ராணி அவதாண்டா… கட்டழகியும் அவதாண்டா…
சிட்டாகப் பறந்துபுட்டா சோகம் என்னை வாட்டுதடா…(மயக்கும்…)

 ( சரணம் - 2)

ராப்பொழுது தூங்கலடா… ராசாத்தி நினைப்புலடா…
என்னிரவைப் பகலாக்கி துன்பத்தை எனக்கு காட்டுதடா...
கண்ணி வலை விரிச்சி வச்சு கண்ணோடு கலந்ததடா...
கண்ணுக்குள்ள இருந்துகிட்டு காதல் போதை காட்டுதடா..! (மயக்கும்…)

PDF-ஆகப் பெற..!


No comments: