Thursday 24 September, 2009

ஆயிரந்தான் இருந்தாலும் அம்மா போல யார் வருவா..! - கானா பாடல்

(பல்லவி)

ஆயிரந்தான் இருந்தாலும் அம்மா போல யார் வருவா..!
அவளைப் போல அன்பைத் தர உலகத்துல யார் இருக்கா..!
உருக்கொடுத்து, உயிர் கொடுத்த உத்தமியை மறக்காதப்பா..!
இந்த கலிகால உலகத்திலே  மனித தெய்வம் அவதாம்பா..!

(சரணம் - 1)

பத்துமாசம் சுமந்தவப்பா... பத்தியம்தான் இருந்தவப்பா..!
பத்தரை மாத்து தங்கமப்பா..! பாசத்திற்கு பணிந்தவப்பா..!
தூக்கத்தையே மறந்தவப்பா... தூய உள்ளம் படைச்சவப்பா..!
துக்கப்பட்டு நீயிருந்தா... உடனே துடிப்பவளும் அவதாம்பா..!

(
ஆயிரந்தான்...)

(சரணம் - 2)

தியாக மனம் கொண்டவப்பா... திடமனசை நமக்களிப்பா..!
ஓயாம உழைப்பவப்பா... நம்மை உற்சாகமா வைச்சிருப்பா..!
கஷ்டங்களை அனுபவிப்பா... கட்டாந்தரையில் படுத்திருப்பா..!
இஷ்டப்பட்டு நீ கேட்டா தன் இதயத்தையே அறுத்து வைப்பா..!

(
ஆயிரந்தான்...)

(என் அன்னைக்கும், உலகத்தில் உள்ள அனைத்து அன்னைகளுக்கும் உங்களனைவரின் சார்பாக இந்த கானாப் பாடலை, அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்..!)


PDF-ஆகப் பெற..!


No comments: