Wednesday 16 September, 2009

பாழாப் போன மனுசனுக்கு… - கானா பாடல்

(பல்லவி)

பாழாப் போன மனுசனுக்கு… பணம் பெரும் போதையடா..!
வாழ வந்த மனுசனுக்கு… குணம் இங்கு இல்லையடா..!
காலம் போற வேகத்துல புகழ் போதை ஏறுதடா..!
வசதி வாய்ப்பு இருந்ததான் ஊரு உன்னை மதிக்குமடா..!


(சரணம் - 1)

நல்ல குணம் இருந்தாலும் பாழும் உலகம் மதிக்காது..!
நாலு பணம் உனக்கிருந்தா ஏழு உலகும் மதிக்குமடா..!
பணம் ஒரு வேசியடா… மயங்கி நீயும் போகாதடா..!
குணம் காத்து நீ வந்தா..! உன்னைத் தேடி பணம் வருண்டா..! (பாழாப் போன...)


(சரணம் - 2)

காசு பணம் வச்சிருந்தா கண்ட சொந்தம் வந்துடுண்டா..!
கஷ்டமுன்னு நீ நின்னா பஞ்சா பறந்து போயிடுண்டா..!
எல்லாம் இங்கு வேஷமடா… பொய்யி முகம் காட்டுதடா..!
பொல்லாத உலகத்துல… எல்லாம் இங்கு பணம்தாண்டா..! (பாழாப் போன...)

PDF-ஆகப் பெற..!


No comments: