Wednesday 27 January, 2010

கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - கானா பாடல்

(பல்லவி)
கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - அங்கே
கோகிலாவின் கரகமணி ஆட்டம்...
பெரிசு... சிரிசுங்கல்லாம் நோட்டம்...
அவ மேல நோட்டம்..!
கோகிலாவை மடக்க நோட்டை நீட்டும்..!
ரூபா நோட்டை நீட்டும்..!

போடு...கோவிலிலே... கோவிலிலே...
கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - அங்கே
கோகிலாவின் கரகமணி ஆட்டம்..!

(சரணம்-1)
குத்துறாளே கும்மாங்குத்து ஆட்டம்
அவ குலுங்கி வரும் ஆப்பிள் பழத்தோட்டம்..!
அவ பாடினாக்கா சிலுசிலுக்குது கூட்டம்
அவ பார்த்தாலே காதல் பனி மூட்டம்...
மனசுக்குள் ஆடுதடா காமக் களியாட்டம்..!

போடு... கோவிலிலே... கோவிலிலே...
கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - அங்கே
கோகிலாவின் கரகமணி ஆட்டம்..!

(சரணம்-2)

ஊரே அவ அழகில் மாட்டும் - அவளுக்கு
இந்த மச்சக்காளை மேலதான நாட்டம்..!
உன்னழகில் எங்கண்ணு ரெண்டும் கூசும்..!
வாடி நீயும் நானும் போடலாம் ஒரு ஆட்டம்..!

போடு... கோவிலிலே... கோவிலிலே...
கோவிலிலே திருவிழாவின் கூட்டம் - அங்கே
கோகிலாவின் கரகமணி ஆட்டம்..!
பெரிசு... சிரிசுங்கல்லாம் நோட்டம்...
அவ மேல நோட்டம்..!
கோகிலாவை மடக்க நோட்டை நீட்டும்..!
ரூபா நோட்டை நீட்டும்..!


PDF-ஆகப் பெற..!


4 comments:

settaikkaran said...

டண்டணக்கா டண்டணக்கான்னு பின்னிப் பெடலெடுக்கிறீங்க அண்ணாத்தே! கரகப்பாட்டுப்படிச்சு மனசு சுத்துது.....!

மோகனன் said...

வாங்க சேட்டை

இது நம்ம கானா கோட்டை...

தினம் ஒரு கானா பாட்டு உமக்கு வேட்டை...

ஷோக்காகீது உன் கருத்து மூட்டை

அடிக்கடி வாங்க சேட்டை..!

மதுரை சரவணன் said...

nalla paattu. kalakkuringka . kaana nalla vanthirukku .

மோகனன் said...

அன்பு நண்பர் மதுரை சரவணன் அவர்களே...

தங்களின் வருகையும், வாழ்த்தும் எனக்கு மகிழ்வை ஊட்டுகின்றன...

அடிக்கடி கானா படிக்க இல்லை... கானா பாட வாங்க..!