Friday 22 January, 2010

காதலை தபால் மூலம் வளர்த்தாங்க..! - கானா பாடல்



(பல்லவி)


காதலை தபால் மூலம் வளர்த்தாங்க அது அந்தக்காலம்..!
ஈமெயில் மூலம் வளக்குறாங்க அது இந்தக் காலம்..!
காதலை டெலிபோன் மூலம் வளர்த்தாங்க அது அந்தக்காலம்..!
செல்போன் மூலம் வளக்குறாங்க அது இந்தக் காலம்..!

(சரணம் - 1)


கருவிங்க மாறிச்சு...காலமும் மாறிச்சு...
கலகல பேச்சிலதான் காசும் தீர்ந்திச்சி...
காசும் தீர்ந்தாதால காதலும் வாடுச்சி...
கடைசியில் காதலும் மாறிப் போச்சி...
மச்சி காதலும் மாறிப் போச்சி...             (காதலை..!)

(சரணம் - 2)


அந்தக் கால காதலுக்கு ஆயிசுதான் நூறுடா..!
இந்தக் கால காதலுக்கு அல்பாயுசு பாருடா..!
உள்ளம் ரெண்டும் சேர்வதுதான் அந்தக் கால காதல்டா..!
உடம்பு சொகம் தேடுறது இந்தக் கால காதல்டா..!  (காதலை..!)

காதல் காதல்... காசு இருக்கும் வரை காதல்..!
காசு தீர்ந்தா வருதே மோதல்..பிகருடன் வருதே மோதல்..!

PDF-ஆகப் பெற..!


No comments: