Thursday 10 September, 2009

ஆழ்வார் பேட்டையில ஒரு அடக்கம் நடக்குது...- கானா பாடல்

(பல்லவி)

ஆழ்வார் பேட்டையில ஒரு அடக்கம் நடக்குது!
ஆறடி மண்ணுக்குத்தான் அங்க சண்டையே நடக்குது..!
உயிரோடு இருக்கையில உதாசீனப் படுத்துது..!
உசிரை விட்டுப்புட்டா உச்சு... உச்சு கொட்டுது..!
(ஆழ்வார்…)

(சரணம் – 1)

உசிரோடு இருக்கும் வரை நல்லதை நீ செய்யிடா…
நல்லவன் மேல் எப்போதுமே பாசத்தை நீ வையடா…
சாதி சனம் எல்லாமுமே பொய்யி பொய்யி தானடா…
நான் சொல்லுறதை நம்பு.. எல்லாம் மெய்யிதானடா..! (ஆழ்வார்…)

(சரணம் – 2)

நல்லதை செஞ்சி வச்சா நாலு ஊரு பாராட்டும்..!
கெட்டதை செஞ்சி வச்சா கேடின்னு ஊர் தூற்றும்..!
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடறது வேணான்டா..!
நாடாண்ட ராசா கூட கடைசியில் பிடி சாம்பல்டா..! (ஆழ்வார்)


PDF-ஆகப் பெற..!


2 comments:

'பரிவை' சே.குமார் said...

nallayirukkunnga unga kana

மோகனன் said...

நன்றி தோழரே... அரபிக்கடல் தாண்டியும் தமிழ் கானா பரவுது எனில் மகிழ்ச்சிதான் தோழரே...

முடிந்த வரை உமது நண்பர்களுக்கும் இதைப் பற்றி சொல்லுங்கள் குமார் ...