Sunday 14 February, 2010

வேலம்மா கூட நானு வேலண்டைன் டே கொண்டாடினேன்..! - கானா பாடல்


(பல்லவி)

வேலம்மா கூட நானு வேலண்டைன் டே கொண்டாடினேன்..!
அவளுக்கு ரோஜா வாங்க காசில்லாம திண்டாடினேன்..!
கண்ணம்மா கூட நானு காதலர் தினம் கொண்டாடினேன்
அவளுக்கு கூஜா தூக்கி குஜாலாக இருந்துக்கினேன்..!

லவ்வோ லவ்வுங்கோ..! பஞ்சு மிட்டாய் லவ்வுங்கோ..!
ஜவ்வோ ஜவ்வுங்கோ..! சல்ப்பேட்டா ஜவ்வுங்கோ..!

(சரணம் - 1)

பீச்சிக்குதான் இஸ்துகினு... கன்னம் ரெண்டும் ஒட்டிகினு...
கடலைத்தான் மொறச்சிகினு... கடலையை வறுத்துகினு...
வேலம்மாவிடம் போட்டேனடா பிட்டு... காதல் பிட்டு..!
காசில்லனதும் பறந்துட்டாடா கிட்டு... அவ என்னை விட்டு..! (வேலம்மா...)

(சரணம் - 2)

ரிக்ஷாவைத்தான் இஸ்துகினு... கண்ணம்மாவை கூட்டிகினு...
பெடலைதான் மிதிச்சிகினு... மவுண்ட் ரோட்டில் ஓட்டிகினு...
கண்ணம்மாவிடம் போட்டேனடா பிட்டு... காதல் பிட்டு..!
அவ கண்ணை காட்டி மயக்கிப்புட்டா கிட்டு.. அவதான் என் சிட்டு..!

இந்த லவ்வுதான் டாப்பு.. மத்ததெல்லாம் டூப்பு... - மாமே
இந்த லவ்வுதான் டாப்பு.. மத்ததெல்லாம் டூப்பு..!   (வேலம்மா...)

(உங்க எல்லாத்துக்கும் நம்ம சார்பில் காதலர் தின வாழ்த்துக்கள் பா..)


PDF-ஆகப் பெற..!


2 comments:

settaikkaran said...

அண்ணாத்தே! அது நீங்க தானா? டக்கரா கீது! வெள்ளாடறீங்க அண்ணாத்தே!

மோகனன் said...

நன்றி மாமே... நன்றி..!