Wednesday 10 February, 2010

காலம் இப்போ மாறிப் போச்சு கண்ணு..! - கானா பாடல்

 

(பல்லவி)

காலம் இப்போ மாறிப் போச்சு கண்ணு..!
அட கம்ப்யூட்டருல சிரிக்கிறாடா பொண்ணு..!
அத நம்பிப் போனா ஆயிடுவ மண்ணு..!
நான் சொல்லுறத நல்லா கேளு கண்ணு..!

(சரணம் - 1)

உலக அறிவை வளர்க்கதாண்டா இன்டர்நெட்டு..!
அதுல போயி பண்ணுறாண்டா காதல் சாட்டு..!
அறிவை இழந்து அதுல போயி கொட்றான் துட்டு..!
மீறி ஆளைத் தேடி போனான்னாக்கா ஆளே அவுட்டு..! (காலம்...)

(சரணம் - 2)

நெட்டில் காதலுன்னு சொல்லிக்கிட்டு பிட்டு படம் காட்டறான்..!
நாம்மாளுந்தான் துட்டை கட்டி வாயப் பொளந்து பாக்கறான்..!
கம்யூட்டரே கதியின்னு காலம் முழுசும் கெடக்கிறான்..!
வாழ்கை சீரழிவது தெரியமா காமத்துல மிதக்குறான்..! (காலம்...)

PDF-ஆகப் பெற..!


No comments: