(பல்லவி)
ஆனா... ஊனா... தேனா...கானா...
என்ன பாடச் சொன்னா மீனா...
அவ காதலைச் சொன்னா தானா
நான் கரைஞ்சி போனேன் தேனா..!
(சரணம் - 1)
அவ கண்ணுக்குள்ள தெரியுதடா வண்டு..!
அவ கையும் காலும் அழகு வாழத் தண்டு..!
அவ முக அழகில் தெரியுதடா பூச்செண்டு..!
என் நெஞ்சுக்குள்ள போட்டாளடா குண்டு..! குண்டு..! குண்டு..! (ஆனா...)
(சரணம் - 2)
அவ அழகில் மயங்கிப் போனேன் நானு..!
அப்போ அவ காட்டினாடா சீனு..!
அவ துள்ளி துள்ளி ஓடயில மானு..!
அவ கைநழுவிப் போறதில மீனு..! மீனு..! மீனு..! (ஆனா...)
(சரணம் - 3)
அவ கூந்தலிலே வச்சேனடா பூவு..!
அவ இல்லாங்காட்டி நெஞ்சுக்குள்ள நோவு..!
அவ நினைப்பில் தூங்கல பல ராவு..!
அட அவதாண்டா எப்போதும் என் டாவு..! டாவு..! டாவு..!(ஆனா...)
PDF-ஆகப் பெற..!